பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் மறைவுக்கு பத்திரிகையாளரும் கவிஞருமான நெல்லை பாரதி எழுதிய அஞ்சலிக் கவிதை இது:-
சிகிச்சைக்காக வந்து நின்றாய்
கதவடைத்துக் கொண்டோம்
பால்கொடுத்த முலையறுத்த
பாவிகளாய் நின்றோம்....
பாகிஸ்தான் குழந்தை வந்தால்
மருந்தளித்து மகிழ்ந்தது
![]() |
நெல்லை பாரதி (096770 88177) |
பெற்ற தாய்க்கு குணமளிக்க
தாயகமே பயந்தது....
தமிழருக்கே உயிர் கொடுத்தான்
நீ சுமந்த பிள்ளை -வீரத்
தாய்ப்பிணியைத் துடைத்துவிட
தமிழன் எவனும் இல்லை!!
ஆண்டவனும் ஆள்பவனும்
உன் குரலுக் கிரங்கல
நல்லவேளை உனது பாதம்
துரோக மண்ணில் இறங்கல....
நோயும் உன்னைக் கொல்லவில்லை -எந்த
நாயும் உன்னைக் கொல்லவில்லை....
மானங்கெட்ட தமிழர்கள்தான்
மரணத்தைப் பரிசளித்தோம்!!
பார்வதித்தாயே- இந்தப் பாவிகளை
ஆசீர்வதிப்பாயே!!!