சென்னை ஜூன் 15: டில்லி சென்ற ஜெயலலிதா, பிரதமர் உட்பட முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சு நடத்தி விட்டு, நேற்று மாலை, தனி விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். தமிழகத்தில் பெரும்பான்மை பலத்தோடு அ.தி.மு.க., ஆட்சி அமைந்த பிறகு, முதல்வர் ஜெயலலிதா இரண்டு நாள் பயணமாக, முதன் முறையாக நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் டில்லி சென்றார். அவருடன் தோழி சசிகலா, செயலர்கள், உதவியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் சென்றிருந்தனர். டில்லியில் தேசிய கட்சி பிரமுகர்களை சந்தித்து பேசிய ஜெயலலிதா, நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சு நடத்தினார். பின்னர் தனி விமானம் மூலம், நேற்று மாலை 5.20 மணிக்கு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து, சால்வை கொடுத்து வரவேற்றனர்.
© Copyright 2009, THARASU Group. All rights reserved. Designed by VIR Software Solutions.